மொரவெவ பொலிஸாரின் அணிவகுப்பு

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை மற்றும் அணிவகுப்பு நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.

மொரவெவ பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி விமுக்தி கயான் சந்ரசேன தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது கந்தளாய் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஏ.டி.கே.விதானகே கலந்து கொண்டு பரிசோதனை நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்