மின்னல் தாக்கி மரம் முறிந்து விழுந்ததில் மூவர் காயம்

மின்னல் தாக்கி  மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.

ஹட்டன், திம்புலபதன, ஆர்கில் தோட்டத்தில் உள்ள ஆலயத்தில் உள்ள ஆலமரம் ஒன்று முறிந்து விழுந்ததிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

முறிந்து விழுந்த மரத்தின் ஒரு பகுதி பாரவூர்தி மற்றும் வீட்டின் மீது விழுந்ததில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

இதனால்  சாரதி மற்றும் அருகிலுள்ள வீட்டின் சமையலறையிலிருந்த இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க