மரத்தில் ஏறியவர் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் பலி

தலவாக்கலை – மடக்கும்புர பகுதியில் மரமொன்றில் ஏறிய ஒருவர், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் கீழே வீழ்ந்து உயிரிழந்தார்.

மடக்கும்புர பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவரே இதன்போது உயிர் இழந்துள்ளார்.

விறகு சேகரிப்பதற்காக மரமொன்றில் ஏறிய நிலையில் குறித்த நபர், குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இதனையடுத்து அவர் மரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாகக் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதன்போது மற்றுமொருவர் காயமடைந்த நிலையில், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.