மனைவிக்கு கணவனால் நிகழ்ந்த கொடூரம்

காலி, பொத்துப்பிட்டிய ரம்புக்க பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று பிள்ளைகளின் தாயான ஏ.வி.ஜி. பிரேமலதா (வயது – 65) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

60 வயதுடைய சந்தேகநபர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்துள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண் பல தடவைகள் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும், அவரை கணவனுடன் வாழ நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் இன்று இருவருக்குமிடையில் வாய்த்தகராறு ஏற்பட்டதையடுத்து மனைவியை கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

கொலையை செய்த கணவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்