
மது போதையில் ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தரை ரயிலில் இருந்து உதைத்து தள்ளியதால் உயிரிழப்பு
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி புறப்பட்ட ரயிலில் இருவர் மது அருந்திய போது ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர் அதனை அவதானித்து அவ்வாறு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியதையடுத்து, ஏற்பட்ட முரண்பாட்டால் ரயிலில் இருந்து உதைக்கப்பட்டதால் ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் வெயங்கொட வதுரவ ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த இடம்பெற்றுள்ளது.
கம்பஹாவைச் சேர்ந்த 52 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஷெர்லி லக்ஷ்மன் திஸாநாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புகையிரதத்தில் மது அருந்திக்கொண்டு பயணித்த இருவர் தொடர்பில் ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகர்கள் விடுத்த அறிவித்தலின் பேரில், இரு ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அங்கு சென்று சோதனையிட்ட போது, இருவர் பாதுகாப்பு அதிகாரிகளை திட்டியுள்ளனர்.
இருவரிடமும் ரயில் டிக்கெட் இல்லை என்று ரயிலில் இருந்த மற்ற ரயில்வே பாதுகாப்பு அதிகாரி பொலிஸாருக்குத் தெரிவித்தார்.
ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரையும் அந்த ரயில் பெட்டியில் இருந்து வேறு புகையிரத பெட்டிக்கு அழைத்துச் செல்ல முற்பட்ட போது அவர்களில் ஒருவர் ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தரை எட்டி உதைத்ததுடன் ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ரயில் கதவுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அறிந்த மீரிகம பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் சந்தேக நபர்கள் இருவரையும் மீரிகம புகையிரத நிலையத்தில் வைத்து இருவரையும் கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இராணுவ சிப்பாய் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.