போலி நாணயத்தாள்களை அச்சிடும் இயந்திரத்துடன் இளைஞர் கைது

யாழ்ப்பாணத்தில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலை வீதியில் பெண்கள் தங்கும் இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மின்னியல் அச்சு இயந்திரத்தை நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு 8 மணி அளவில் வேறு இடத்துக்கு மாற்ற முற்பட்ட வேளை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பளை பகுதியில் 1.3 மில்லியன் ரூபா பெறுமதியிடப்பட்ட போலி நாணயத்தாள்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த சந்தேக நபருடன் தொடர்புடைய இளைஞரே யாழ்ப்பாணம் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று செவ்வாய்கிழமை முன்னிலைபடுத்தப்பட்டார். இதன்போது சந்தேக நபரை வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மன்று வழக்கு விசாரணைகளை குற்ற விசாரணைப் பிரிவுக்கு மாற்ற அனுமதி அளித்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்