போதையில் நீராட சென்ற இருவர் ​வாவிக்கு பலி

14,976

அநுராதபுர – கஹட்டகஸ்திகிலியஇ இஹல கங்ஹிடிகம வாவியில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது.

பொல்கஹவெல மற்றும் பூஜாபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 34 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரும் மேலும் இருவருடன் மது அருந்திவிட்டு போதையில் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கியுள்ளதாக தெரியவந்தள்ளது.

உயிரிழந்த இருவரின் சடலங்கள் கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Sureshkumar
Srinath