-யாழ் நிருபர்-
பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்ட தந்தை!
யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில், தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளளார்.
சங்கானை பகுதியை சேர்ந்த ஐயாத்துரை கிருஷ்ணகுமார் (வயது 63) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கு இரண்டு பிள்ளைகள், பட்டதாரிகளான பிள்ளைகள் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை
இந்நிலையில் பிள்ளைகள் குறித்த கவலை மற்றும் விரக்தி நிலையில் அவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.