நாடளாவிய ரீதியில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவு

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலம் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 4 மணிவரையிலான நிலவரத்தின்படி, நாடளாவிய ரீதியில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதன்படி

வன்னி – 65%

மட்டக்களப்பு – 64%

திருகோணமலை – 63.9%

கம்பஹா – 80%

புத்தளம் – 78%

மொனராகலை – 77%

பதுளை – 73%

திகாமடுல்ல – 70%

நுவரேலியா 80%

கொழும்பு 75%

இரத்தினபுரி 74 % இற்கும் அதிகம்

கேகாலை 72%

குருநாகல் மாவட்டத்தில் 70 சதவீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.