துப்பாக்கியுடன் ஒருவர் கைது

உடவலவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹஆர பிரசேத்தில் வைத்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடவலவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

கைதான சந்தேகநபர் 25 வயதுடைய உடவலவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடவலவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.