ஜனாதிபதி தலைமையில் முக்கிய பேச்சுவார்த்தை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும்இ கிழக்கு மற்றும் வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை முதல் இரண்டு நாட்களுக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இடம்பெறவுள்ள சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், நல்லிணக்க பொறிமுறைகள், காணி விவகாரம், பயங்கரவாத தடுப்புச் சட்டம், என்பவை பற்றியும் நாளை நடைபெறவுள்ள சந்திப்பில், அதிகாரப் பகிர்வு தொடர்பாக, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்