
கொழும்பு கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இன்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொட்டாஞ்சேனை விவேகானந்த மேடு பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 51 வயதுடைய , குறித்த பகுதியில் வசிக்கும் நபரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.