கிழக்கு ஆளுநர் பிரதேச சபைக்கு கண்காணிப்பு விஜயம்

-மூதூர் நிருபர்-

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபைக்கு குறுகிய கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.

இவ்விஜயத்தில், பிரதேச சபையில் நிலவும் பிரச்சினைகள், தேவைப்பாடுகள் குறித்து பிரதேச சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுடன் கேட்டறிந்து கொண்டார்.

மேலும் கிடைக்கக்கூடிய வளங்களை திறமையாகவும் திறம்படவும் பயன்படுத்த கிழக்கு ஆளுநரால் அறிவுறுத்தலும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்