காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்-

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில்  கடந்த சனிக்கிழமை  கடல் தொழிலுக்கு சென்று காணாமல் போன மீனவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீன் பிடிப்பதற்காக தெப்பம் மூலம் கடலுக்கு சென்றவர் காணாமல் போன நிலையில், இரண்டு நாட்களாக கடற்படையினர், மீனவர்களின் உதவியுடன் அவரை தேடி வந்தனர்.

அவர் பயணித்த தெப்பம் கடந்த சனிக்கிழமை கரையொதுங்கியது.

இந்நிலையில் அவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த முத்துச்சாமி தவராசா (60 வயது) என்னும் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாத மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்