
ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
வத்தளை ஹெந்தலை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தளையைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே நேற்று திங்கட்கிழமை 1 கிலோகிராம் 14 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து சட்டவிரோதமான வழியில் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் 15 இலடட்சம் ரூபா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
