எரிவாயு விநியோகம் தொடர்பில் புதிய செயலி அறிமுகம்
சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில், புதிய நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, எரிவாயு விநியோகம் மற்றும் எரிவாயு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை பற்றி, நுகர்வோரையும் விற்பனை முகவர்களையும் தெளிவூட்டுவதற்கான தொலைபேசி செயலியொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த செயலி மூலம், நுகர்வோரும் விற்பனை முகவர்களும் குறித்த பிரதேசத்தில் பகிர்ந்தளிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான தகவல்களை அறிந்து கொள்ள முடியும், என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.