இந்தியாவிலிருந்து பெறுமதியான பொருட்கள் கடத்தல்: 12 பேர் கைது

-மன்னார் நிருபர்-

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் மற்றும் மஞ்சளை கடத்த முற்பட்ட 12 பேர் இந்திய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டை, மஞ்சள் உள்ளிட்ட கடத்தல் பொருட்களை இன்று செவ்வாய் கிழமை அதிகாலை கடத்தி செல்வதாக இந்திய கடலோர பொலிஸ் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து கடல் பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்கு இடமாக 4 இலங்கை படகும் அதில் இருந்த 8 பேரையும், அதே போன்று மண்டபம் பகுதியை சேர்ந்த ஒரு படகையும் அதிலிருந்த 4 பேரையும் இந்திய கடலோர பொலிஸார் கைது செய்து விசாரணை நடாத்தி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்