அமெரிக்காவின் திறைசேரி திணைக்க பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம்

37

அமெரிக்காவின் திறைசேரி திணைக்களம் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 26 முதல் 29 வரை இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் சர்வதேச நாணய நிதிய குழுவினர் வருகை தந்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதிய கொள்கைகளுக்கு அமைய இலங்கைக்கு உதவ தயார் என இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதிய பணிக்குழாம் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

அதன்படி, ஊழியர்கள் உடன்படிக்கை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த கட்டமாக அமெரிக்கா திறைசேரி நிதி குழுவினர் வரவுள்ளனர்.

Sureshkumar
Srinath