உலக உணவு திட்டத்தின் கவனம் இலங்கை மீது

உலக உணவுத்திட்டம் இன்று வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்,  இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை தொடர்ந்தும் கரிசனை நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட வீட்டு உணவுப் பாதுகாப்பு ஆய்வின்படி 33 சதவீத குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தன.

கடந்த ஜனவரி மாதம் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கொழும்பின் நகர்ப்புறங்களில் உணவுப் பணவீக்கம் 60.1 சதவீதமாக இருந்தாக உலக உணவுத்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

உலக உணவுத்திட்டமானது இந்தநிலையில் பொது உணவு விநியோகம், பாடசாலை உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆதரவு மூலம் 3.4 மில்லியன் மக்களுக்கு உதவ தாம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.