கிழக்கு ஆளுநரால் கிராமிய சுகாதார நிலையம் திறந்து வைப்பு

-மூதூர் நிருபர்-

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள மூதூர் – பெரியபாலம் கிராமிய சுகாசுதார நிலையம் புனரமைப்புச் செய்யப்பட்டு இன்று வியாழக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வு மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முஹைதீன் தலைமையில் இடம்பெற்றது.

சுகாதார மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 16 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட இக்கட்டிடத்தை முதன்மை அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.ஜி.எம்கொஸ்தா, பிரதி பிராந்திய சுகாதார சேவை வீ.பிரேமானந், திருகோமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்