ஆளுநரின் வாகனத் தொடரணி விபத்து

-யாழ் நிருபர்-

வட மாகாண ஆளுநர் பி எஸ் எம் சாள்ஸ் பயணித்த உத்தியோக பூர்வ வாகனம் யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வட மாகாண ஆளுநரின் வாகனம் முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனம் பாதசாரிகள் கடவையில் வேகத்தை கட்டுப்படுத்திய நிலையில் வேகத்துடன் பயணித்துக் கொண்டிருந்த ஆளுநர் வாகனத் தொடரணி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்