
தாய் தந்தை இடையே வாக்குவாதம் : தந்தையை தாக்கி கொன்ற மகன்
மாவனெல்ல – மகேஹெல்வல பிரதேசத்தில் தந்தை ஒருவர், மகனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுகிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
தந்தைக்கும் தாய்க்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மகன் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
45 வயதான தந்தை நேற்று இரவு உயிரிழந்துள்ளதுடன், 20 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.