பொலிஸார் துரத்திச் சென்ற நபர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் பலாலி பொலிஸார் துரத்திச் சென்றதால் நபர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், சங்கானை வீதி, அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த செல்வநாயகம் பிரதீபன் (வயது 41) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்,

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது பலாலி பொலிஸார் வழிமறித்தனர்.

அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாததால், அவரை பொலிஸார் துரத்திச் சென்றனர்.

இதன்போது அவர் வேகமாகச் சென்றதால் பலாலி ஆயர்கடவை பிள்ளையார் ஆலயத்துக்கு அருகே மின்கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகினார்.

பொலிஸார் அவரை, 1990 இலக்க அவசர நோயாளர் காவு வண்டி மூலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸாருக்கும் அங்கிருந்த பொது மக்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் குறித்த பகுதியில் பதற்றம் நிலவியது.

நிலைமையை சரிசெய்ய அங்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்