5 மாதங்களில் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்

எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினை காண முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையிடம் தெளிவான திட்டம் மற்றும் தெளிவான பாதை உள்ளது, அதனை பின்பற்றுவதன் ஊடாக இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு எதிர்வரும் 5 மாதங்களில் தீர்வு காண முடியும்.

எனவே, மக்கள் பொறுமையுடன் செயற்பட வேண்டும் என மஅவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க