
யாழில் மது போதையில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்
-யாழ் நிருபர்-
யாழில் மது போதையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். கோப்பாய் பகுதியை சேர்ந்த தங்கவடிவேல் முருகானந்தன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.
இவர் கடந்த சில நாட்களாக மன விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மது போதையில் காணப்பட்டுள்ளார். அந்தவகையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
