மட்டக்களப்பு -திருகோணமலை பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயம்

மட்டக்களப்பு -திருகோணமலை பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயம்

-மூதூர் நிருபர்-

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தோப்பூர் -பள்ளிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 26, 23 வயதுகளையுடைய இருவரே விபத்தில் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு -திருகோணமலை பிரதான வீதியில் பயணித்த குறித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதித் தூணில் மோதுண்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மட்டக்களப்பு -திருகோணமலை பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயம்
மட்டக்களப்பு -திருகோணமலை பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயம்