மட்டக்களப்பு – வந்தாறுமூலையை சேர்ந்தவர் மதவாச்சி பிரதேசத்தில் அடித்து கொலை
மதவாச்சி பிரதேசத்தில் அடித்து கொலை-அநுராதபுரம் – மதவாச்சி பிரதேசத்தில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் வேலை செய்யும் இரு ஊழியர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் மட்டக்களப்பு – வந்தாறுமூலை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடையவர் ஆவார்.
சம்பவத்தன்று, கோழி பண்ணையில் வேலை செய்யும் இரு ஊழியர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறின் போது சந்தேக நபர் சக ஊழியரை அடித்து கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.