
கிளிநொச்சி மாவட்டத்தில் 97.02வீதமான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன
கிளிநொச்சி மாவட்டத்தில் 97.02வீதமான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன 37 குடும்பங்களே இன்னும் மீள் குடியேற்ற வேண்டிய தேவையுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்ணிவெடியகற்றல் செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
மாவட்டத்தில் 97.2 வீதமான நிலப்பரப்பில் இதுவரை கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளது 2.7வீதமான நிலப்பரப்பிலே கண்ணிவெடிகள் அகற்ற வேண்டிய தேவையுள்ளது.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் முகமாலை கிராம அலுவலர் பிரிவிலேயே குறித்த 2.7வீதமான பகுதிகள் அகற்றப்படாமையுள்ளது.
இதன் காரனமாக 37 குடும்பங்களை மீளக்குடியமர்த்த முடியாத நிலை காணப்படுவதாகவும் கண்ணி வெடியகற்றும் நிறுவனங்களுடன் நடைபெற்ற இரண்டு கலந்துரையாலைத்தொடர்ந்து இந்த வருடம் எட்டாம் மாதத்தில் கண்ணி வெடியகற்றிய பிரதேசங்களை கையளிக்க முடியும் என தெரிவித்திருக்கிறார்கள்.
விரைவாக குறித்த 37 குடும்பங்களையும் மீளக்குடியமர்த்த முடியும் என தெரிவித்தார்.