
பெண் எரித்துக் கொலை: மற்றுமொரு சந்தேக நபர் கைது
மொனராகலை பகுதியில் வீடொன்றில் கடந்த 11 ஆம் திகதி பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் தம்பகல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலோன் கந்தபிடிய பகுதியில் உள்ள வீட்டில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனமடுவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய நபர் இந்த கொலைச் சம்பவத்திற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை இந்த கொலை தொடர்பில் இரு பெண் சந்தேகநபர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாய் கொடூரமாக கொலை: மகன், மகள், மருமகள் கைது