அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று காலையுடன் நிறைவு

அனுராதபுரம் வைத்தியருக்கு நீதிக் கோரி நேற்று ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று வியாழக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்துள்ளது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதாவது, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் நேற்று தொடக்கம் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையானது இன்று காலையுடன் நிறைவடைந்துள்ளது, என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.