
மாடுகளை கடத்தியவர் கைது
யாழில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை கடத்திய நபரொருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த சந்தேகநபர் சுழிபுரத்தில் இருந்து லொறியில் மூன்று மாடுகளை கடத்திச் செல்ல முற்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட அவர், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.