
மைதான ஆடுகள விரிப்பு விஷமிகளால் தீ வைப்பு
-அம்பாறை நிருபர்-
கல்முனை – சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை லெஜன்ஸ் விளையாட்டு கழகத்திற்கு சொந்தமான மைதான ஆடுகள விரிப்பு இனந்தெரியாத நபர்களினால் எரியூட்டப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் லெஜன்ஸ் கிறிக்கட் 7 என்ற பெயரில் கடின பந்து சுற்றுக்போட்டியை நடாத்தும் லெஜன்ஸ் விளையாட்டு கழகத்திற்கு சொந்தமான மைதான ஆடுகள விரிப்பு இனந்தெரியாத நபர்களினால் எரியூட்டப்பட்டுள்ளதாக லெஜன்ஸ் கழகம் சார்பாக அதன் செயலாளரினால் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த முறைப்பாட்டிற்கமைய கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸாரும் அம்பாறையில் இருந்து தடயவியல் பொலிஸ் பிரிவினரும் வரவழைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு எரியூட்டப்பட்ட மைதான ஆடுகள விரிப்பின் பெறுமதி 120,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவம் இடம்பெற்ற போது மைதானத்தில் கடமையாற்றும் காவலாளி கடமையில் இல்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதே போன்ற சம்பவம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்