கனடாவில் துப்பாக்கிச்சூடு: இலங்கை தமிழர் பலி
கனடாவில் பணிபுரிந்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் நேற்று திங்கட்கிழமை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
மைலிட்டி பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் பார்த்திபன் (வயது – 44) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கனடாவில் வசித்த வீட்டிற்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம், எதனால் இடம்பெற்றது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயற்சித்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் கனடாவின் ஒன்ராறியோ பொலிஸார் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.