பாதுகாப்பற்ற மின் கம்பி: 3 காட்டு யானைகள் பலி

6

கண்டி மாவட்டத்தின் கஹல்ல – பல்லேகல சரணாலய பகுதியில் அனுமதியின்றி நடத்திச்செல்லப்பட்ட பண்ணையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பற்ற மின்சாரக் கம்பியில் சிக்குண்டு மூன்று காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

இந்த பண்ணையை நடத்தி வந்ததாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் இருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் அந்தப் பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Sureshkumar
Srinath