அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி
இலங்கையில் அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் பல புதிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை இந்த அபிவிருத்தி திட்டங்களில் மேம்படுத்துவது முதன்மையாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திட்டங்களுக்கான தொடர்ந்தும் நிதியுதவி வழங்கத் தயாராக உள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.