-கிண்ணியா நிருபர்-
வெடுக்குநாறி மலையில் இடம் பெற்ற சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும் அதனை கண்டித்தும் திருகோணமலை சிவன்கோயிலடிக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மாலை இடம் பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தை சமூக செயற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
கடந்த எட்டாம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை சிவன் ஆலயத்தில் வழிபாட்டின் போது கைது செய்யப்பட்ட 8 பேரை விடுதலை செய்யுங்கள் எனவும், வழிபாடு எமது அடிப்படை உரிமை ஆதி சிவன் ஆலயம் எமது பூர்வீகம், ஈழத்தின் சமயத் தலைவர்களை அபகரிக்காதே, தொல்பொருள் எனும் போர்வையில் பௌத்தத்தை விதைக்காதே, வழிபாட்டை தடுக்கும் உரிமையை காவல் துறையினருக்கு கொடுத்தது யார்?, ஆலய நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய், ஆலயங்கள் சைவத் தமிழர்களின் பூர்வீக அடையாளம், போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்