9 மாத குழந்தை முதல் 15 வயது வரையான சிறுவர்களுக்கு தடுப்பூசி

நேபாளத்தில் நாடு முழுவதும் உள்ள 57 இலட்சம் சிறுவர்களுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி போடுவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 9 மாத குழந்தை முதல் 15 வயது வரையான சிறுவர்களுக்கு இவ்வாறு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

நேபாளத்தில் மொத்தமாக 48 ஆயிரத்து 798 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு, 49 ஆயிரத்து 937 பணியாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.