காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்

கண்டியில் கடந்த 17 நாட்களாக காணாமல் போயுள்ள இளைஞன் ஒருவனை கண்டுபிடிக்க களுத்துறை தெற்கு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

மஹதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல் போயுள்ள இளைஞனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தில் உள்ள இளைஞன் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் 071 – 8591691 அல்லது 071 – 8594360 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போயுள்ள இளைஞனின் விபரங்கள் ;

பெயர் – பொல்வத்த கொல்லாகே நவோத் கிம்ஹான்
வயது – 29
முகவரி – மஹதெனிய, எழுவாவல, தெனிபிட்டியாய
அங்க அடையாளம் – 5 அடி 5 அங்குலம் உயரம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்