காதலனை வீட்டில் தங்க வைக்க மறுத்த கணவன் : உயரழுத்த டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய மனைவி
காதலனை வீட்டில் தங்க வைக்க கணவன் மறுத்ததால் மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்வம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டம் ‘பிப்ரைச்’ என்ற ஊரைச் சேர்ந்தவர் ராம் கோவிந்த், கூலித்தொழிலாளியான இவரது மனைவி ஷில்பா (வயது 34).
திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது., இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.
ஷில்பாவுக்கு பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு இளைஞருடன் முறையற்ற காதல் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஷில்பாவும் குறித்த இளைஞரும் கடந்த ஏழு ஆண்டுகளாக பழகி வந்துள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஷில்பா கடும் மன வேதனை அடைந்தார், மேலும் ஆத்திரத்தில் தனது வீட்டு முன் உள்ள உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறினார்.
இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கீழே இறங்குமாறு கூறினர், ஆனால், அவர் கீழே இறங்க மறுத்தார்.
இதுபற்றி பொலிஸார் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி அந்த பெண்ணை உயிருடன் மீட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
மேலும், பொலிஸார் நடத்திய விசாரணையில் ஷில்பா தனது காதலரான நபரை தனது வீட்டில் தங்க வைக்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விபரீத கோரிக்கைக்கு கணவன் ஒப்புக் கொள்ள மறுத்துள்ளார்.
இதன் காரணமாக அந்த பெண் தற்கொலை முயற்சி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்