11 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 11 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த வாகன விபத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில், நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கௌனிகம – தொடங்கொடை ஆகிய பகுதிகளுக்கு இடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.