10 வைத்தியசாலைகளில் நாளை பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் 10 வைத்தியசாலைகளில், நாளை செவ்வாய் கிழமை பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

காதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ்சு இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கை தேசிய வைத்தியசாலை, கராபிட்டிய, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, பேராதனை ஆகிய போதனா வைத்தியசாலைகள், கேகாலை, பொலன்னறுவை ஆகிய பொது வைத்தியசாலைகள் மற்றும் மன்னார் ஆதார வைத்தியசாலை என்பவற்றில் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.