வீட்டை விட்டு சென்றவர் காட்டுப்பகுதியில் சடலமாக மீட்பு

-பதுளை நிருபர்-

பண்டாரவளை ஊவா ஹைலன்ஸ் தோட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று செவ்வாய் கிழமை மாலை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை ஊவா ஹைலன்ஸ் தோட்டத்தை சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டை விட்டு வெளியே சென்றவர் கடந்த 2 நாட்களாக வீடு திரும்பாததால், அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து தேடுதல் மேற்கொண்ட போது குறித்த நபர் ஊவா ஹைலன்ஸ் தோட்ட காட்டு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பண்டாரவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்