யாழ்.சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை

-யாழ் நிருபர்-

வெசாக்தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் பொது மன்னிப்பில் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறு குற்ற செயல்களோடு தொடர்புள்ளோர் மற்றும் தண்டப்பணம் செலுத்த தவறி நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 ஆண் கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் வெசாக் தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க