முகநூல் விருந்தில் போதைப்பொருள் பாவனை: 14 பேர் கைது

கம்பஹா, நீர்கொழும்பு மற்றும் ஜா-எல கலால் நிலைய அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை முகநூல் விருந்து ஒன்றில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 14 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 19 முதல் 30 வயதுடையவர்கள் என கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விருந்துக்கு பல பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளும் வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

விருந்தில் இணைந்த இளைஞர்கள் குழுவொன்று விடுதியில் அறைகளை முன்பதிவு செய்து, அறைகளுக்குள் சட்டவிரோத போதைப்பொருளை பயன்படுத்திய போது கலால் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இளைஞர்கள் ஐஸ், கொக்கைன் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது.