மின்கட்டணம் அதிகரிக்கப்படுகின்றதா?

மின்சார கட்டணத்தை இந்த ஆண்டு அதிகரிக்காவிட்டால் இலங்கை மின்சார சபை சுமார் 250 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படும், என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், மின்சார கட்டண திருத்தம் தொடர்பான நடவடிக்கைகள் அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும், என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.