மலேஷியாவில் தொடரும் பாரியளவிலான மனித கடத்தல்

மலேஷியாவில் இடம்பெறும் பாரிய அளவிலான மனித கடத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்வதாக அந்த நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பு ஒன்றின் போது இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்ட மதக் குழுவொன்றைச் சேர்ந்த 171 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது மனித கடத்தலுக்கு தயார்படுத்தப்பட்டிருந்த மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 402 சிறுவர்களும் மீட்கப்பட்டனர்.