மண் மேட்டிலிருந்து விழுந்து ஒருவர் பலி

7

-பதுளை நிருபர்-

பசறை கிக்கிரிவத்தை கல்குடாவத்தை பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு மண் மேடு ஒன்றில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கல்குடாவத்தை பகுதியை சேர்ந்த முத்தையா (வயது – 68) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் நேற்று இரவு 9 மணியளவில் உயிரிழந்துள்ளதாக 119 பொலிஸ் பிரிவுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் பின்னர் பசறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதாகவும் பசறை பொலிஸ் இரவு நேர நடமாடும் ரோந்து உத்தியோகத்தர் குழுவொன்று அவ்விடத்திற்குச் சென்று சோதனையிட்ட போது, குறித்த நபர் மரணித்த நிலையில் காணப்பட்டதாகவும் ​​ பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று அடி உயரமான மண் மேட்டில் இருந்து கீழே விழுந்த நிலையில் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத போதிலும் சம்பவம் தொடர்பில் பசறை நீதவான் பார்வையிட்ட தன் பின்னர் சடலம் பதுளை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பியரத்ன ஏக்கநாயக்க தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

Sureshkumar
Srinath