மண்ணெண்ணெய் விலையேற்றம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து

மண்ணெண்ணெய் விலை திருத்தமானது பல வருடங்களாக கட்டாயமாக இருந்தது, என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 87 ரூபாவால் அதிகரித்து, தற்போது ஒரு லீற்றர் 340 ரூபாவாக உள்ளது

இந்த விலையேற்றம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் விஜேசேகர,

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நஷ்டம் ஏற்படுவதற்கு மண்ணெண்ணையை மானிய விலையில் விற்பனை செய்வதே பிரதான காரணம் என தெரிவித்தார்.

தற்போது செலவினங்களுக்கு இணையான விலைகளுடன், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், மீன்பிடி மற்றும் மண்ணெண்ணெய்யை நம்பியுள்ள தோட்டத் துறைகளுக்கு நேரடி பண மானியத்தை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க