மண்டூர் முருகன் ஆலயத்தை நோக்கிய பாதயாத்திரை

-கல்முனை நிருபர்-

கிழக்கில் வரலாற்று பிரசித்தி பெற்ற சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் மண்டூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் தீர்த்தோற்சவம் எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதனையிட்டு பக்தர்கள் பாதயாத்திரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காரைதீவு மாவடி ஶ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை பயணத்தை ஆரம்பித்தனர்.

காரைதீவில் ஆரம்பித்த பாதயாத்திரை கல்முனை நகர், கிட்டங்கி, நாவிதன்வெளி, வேப்பையடி ஊடாக மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தை சென்றடையவுள்ளது.

இப் பாத யாத்திரை நற்பிட்டிமுனை அருள்மிகு ஶ்ரீ அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்ததும் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றதுடன் அடியார்களுக்கான காலை உணவும் வழங்கப்பட்டது.