
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருமண்வெளி கிராமத்தின் மாரியம்மன் ஆலய வீதிக்கான நீர் வழிந்தோடும் வடிகான்கள் அமைக்கும் பணி இரண்டாவது கட்டமாக இன்று புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளரான பூபாலபிள்ளை பிரசாந்தன் இதனை ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிராமிய குழு உறுப்பினர்கள், குருமன்வெளி கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் மற்றும் கிராம பொதுமக்கள், நலன்விரும்பிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்